திருகோணமலை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை, காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வறட்சியான காலநிலை தொடர்ந்தும் நிலவி வருகின்றன.
11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 96 கிராம சேவையாளர் பிரிவுகளில் 27,646 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகமம், ஈச்சலம்பற்று, வெருகல் புல்மோட்டை, கோமரங்கடவல, மொறவௌ முதலான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நடுவூற்று, சூரங்கல், சுங்கான்குழி, மணியரசங்குளம், ஆயிலியடி முதலான கிராமங்கள் வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நடுவூற்றுக்குளம், மணியரசங்குளம், பட்டியனூர்க்குளம் முற்றாக நீரின்றிக் காணப்படுகின்றது. மீன்கள் இறந்தும் காணப்படுகின்றன. நன்னீர் மீன் பிடிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த கிராமங்களில் வேளாண்மைப் பயிர்சசெய்கை வறட்சியினால் கருகிக் காணப்படுகின்றது.வயல் நிலங்கள் வெடித்துக் காணப்படுகின்றன. அத்துடன் வேளாண்மை.தண்ணீர் இல்லாமல் அழிவடைந்து காணப்படுகின்றது.
இதேவேளை வீட்டுத் தோட்டப்பயிர்கள் கருகி அழிவடைந்து காணப்படுகின்றன. கால் நடைகள் தண்ணீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றன.குளங்களில் நீர் மட்டம் குறைந்து காணப்படுகின்றது.
கிணறுகளில் நீரைப் பெறுவது மிகக் கடினமாகவுள்ளது. இதனால் இந்த பிரதேசத்திலுள்ளவர்கள் குடி நீரைப் பெறுவதிலும் மக்கள் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அத்துடன் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்ட்டுள்ளனர்.






