கடந்த இரண்டு நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிப்பு!!

694

குழந்தைப் பேறுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சமோதனி ரனிதிக்கா பெர்னாண்டோ தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 22 ஆம் திகதி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதிலும் பதிவான டெங்கு நோயாளர்களி எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி நாட்டில் மொத்தமாக 103000 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதுடன், டெங்குவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.