வல்லுறவு புரிந்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை : 17 வருடங்களின் பின் தீர்ப்பு!!

450

பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம் ரூபாவை நட்டஈடாகசெலுத்தவேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டுசிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

2002 செப்டெம்பர் 2ம் திகதி லலித் பிரேமகுமார (வயது 47), இந்திக்க சம்பத்(வயது 37) ஆகிய இவர்கள் இருவரும் 49 வயதான பெண்ணொருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் பலவந்தமாகக் கடத்திச் சென்று வல்லுறவு செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது