கம்போடியாவை சேர்ந்த 74 வயது பெண்மணி ஒருவர் கன்றுக்குட்டியை தனது கணவராக பாவித்து மரியாதை செலுத்தி வருகிறார்.
கம்போடியாவை சேர்ந்தவர் கிம் ஹாங், இவரது கணவர் டோல் குட் ஒரு வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சோகமாக இருந்த கிம் ஹாங் சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார்.
அப்போது, உங்கள் வீட்டில் உள்ள மாடு கன்று போடும், உன் கணவனே கன்றுக்குட்டியாக பிறப்பார் என கூறியுள்ளார்.
இதன்படி கடந்த மார்ச் மாதம் கன்று ஈன்றது, இதை தன் கணவனாக பாவித்து பணிவிடைகளை செய்து வருகிறாராம் கிம் ஹாங்.
அவர் கூறுகையில், நான் இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், கன்றுக்குட்டியாக என் கணவர் மறுபிறவி எடுத்திருப்பதை முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்காக தன் வீட்டை பெரிதாக்கியதுடன், ஸ்பெஷல் படுக்கை அறை ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளாராம்.
இவர் மட்டுமல்லாது இவரது குழந்தைகள், பேரன் பேத்திகள் மற்றும் உறவினர்களும் கன்றுக்குட்டியுடன் அன்பாக பழகுகிறார்களாம்.








