அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் : இராணுவ கூட்டுத் தலைவர் எச்சரிக்கை!!

528

அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க இராணுவக் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜோசப் டன்போர்ட் கூறியுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததைத் தொடந்து மீண்டும் ஒரு ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் அமெரிக்க இராணுவக் கூட்டுத் தலைவர்களின் தலைவர் ஜோசப் டன்போர்ட் கோலரடோவில் நடைபெற்ற பாதுகாப்பு மன்றத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசுகையில், வடகொரியா ஏவுகணை திட்டங்களுடன் பின்னிப் பிணைந்த நாடு.

தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதலை நடத்தக் கூடும். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வடகொரியாவின் ஏவுகணைகள் எந்த கோணத்திலும் அமெரிக்காவை தாக்கும் வல்லமையுடன் இருக்கலாம் எனவும் ஜோசப் டன்போர்ட் கூறியுள்ளார்.