உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்து கடலில் மிதக்கும் படகொன்றில் இந்த காற்றாலை உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடியில் கடலுக்குள் மிக உயரமான விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன.
அவை கடல் நீரை சுழற்றும் போது, காற்றாலையின் காற்றாடி சுற்றும். அதன் சக்தியில் மின்சாரம் உருவாகிறது. இதற்கு ‘ஹைவின்ட்’ (Hywind) என பெயரிட்டுள்ளனர்.
இந்த மின் திட்டத்தை நோர்வேயைச் சேர்ந்த ஸ்டேடோயில் (Statoil) நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் பரிசோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன் மூலம் 20 ,000 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்க முடியும்.
இந்த தகவலை ஹைவின்ட் திட்ட இயக்குனர் லீப் டெல்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் செலவு குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹைவின்ட் விசையாழிகள் 175 மீட்டர் உயரமானவை. இதன் மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






