யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்தும் விநோத கிராமம்!!

375

 
உலகில் உள்ள பல கிராமங்கள் இயற்கை எழில் கொண்டதாகவும், யுத்த கால வடுக்களையும் கொண்டதாக காணப்படுவதோடு, மன்னர்கள் வாழ்ந்த காலத்தினை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அந்த வகையில் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் இயற்கை எழில்களைக் கொண்ட பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்ட கவர்ச்சிகரமானதும், தனித்துவமானதுமான கிராமமாக ஹெக்குண்டா காணப்படுகின்றது.

கர்நாடாகா பெங்களூரில் சிறப்பு வாய்ந்ததொரு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிராமமாக அமைகின்றது.
பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றிலும் சோழர்களால் கட்டப்பட்ட பல கோவில்களைக் கொண்ட கிராமங்கள் பல உள்ளன.

அத்துடன், கர்நாடாகா பெங்களூரில் சிறப்பு வாய்ந்ததொரு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிராமமாக ஹெக்குண்டா கிராமம் காணப்படுகின்றது.

இந்த நிலையில், கி.பி 1115ல் கருங்கற்களினால் கட்டப்பட்ட படிவங்கள் இதற்கு சான்று பகர்கின்றன. கொங்கிறீட் கட்டிடங்களின் முடிவில்லாத வரிசைகள், பழங்கால கல்வெட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் என்பன இயற்கையோடு இணைந்ததாகக் காணப்படுகின்றது.

இந்தக் கிராமத்தில் ஏழு கவர்ச்சியான நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இராமர் கோயில் என்பன இந்தக் கிராமத்தில் காணப்படுகின்றன.

துப்பாக்கிகளைக் கையாளும் வீரர்கள் போன்ற நினைவுச் சின்னங்கள் கிராமத்தின் நடுவில் உள்ளது.

மலைகள், பாறைகள், குகைகள், பறவைகள் என்பன வரலாற்றுப் பொக்கிஷங்களாக புத்துயிரூட்டும் இயற்கையுடன் கூடியதாக அமையப்பெற்றுள்ளது.

இன்று புராதன வரலாற்றை எடுத்துக்காட்டும் கிராமங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் ஹெக்குண்டா கிராமத்தில் மகத்தான பாறைக குன்று ஒன்று மிகவும் சுவாரசியமான அம்சமாகும்.

கிராமத்தின் பின்புறம் உள்ள கோபுரத்தின் முகப்புக்கள் தனித்துவமான சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை பார்ப்போரை ரசிக்கச் செய்வதோடு மெய்மறக்கச் செய்கிறது. சைவ சமயச் சார்புள்ள இறைவடிவங்களின் எழில் மிகு வேலைப்பாடுகள், மனிதனின் சிந்தையை கவர்கின்றது.

கோபுர சிலைகள் அங்கு வடிக்கப்பட்டுள்ள யுத்த காலத்தை எடுத்துக்காட்டும் கல்வெட்டுக்கள் சிறிய தூண்களில் காட்டப்பட்டுள்ளமை இந்தக் கிராமத்திற்கு உரிய எழிலை மேலும் மெருகூட்டுகின்றது.