நூறு மரணத்தின் வலியைச் சந்தித்த 16 வயதுச் சிறுமி!!

499

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு தொடர்ந்து பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட யாசிதி இளம்பெண் ஒருவர் தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

ஈராக்கின் வடக்கு பகுதியில் குடியிருந்து வந்தவர் Ekhlas. இவருக்கு 14 வயது இருக்கும்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்த பகுதியில் முதன்முறையாக நுழைந்துள்ளனர்.

அங்குள்ள பெரும்பாலான ஆண்களை கொன்று குவித்த ஐ.எஸ் அப்பகுதியில் உள்ள சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை ஆயிரக்கணக்கானோரை சிறைப்பிடித்தனர். அந்த போராட்டத்தில் மாணவி Ekhlas ன் தந்தையை கொலை செய்துள்ளனர்.

தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட சிறுமிகள் உள்ளிட்ட இளம்பெண்களை சந்தை ஒன்றில் ஏலம் விட்டதாக கூறும் அவர், ஐ.எஸ் பயங்கரவாதி ஒருவரால் விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்த நபருடன் ஆறு மாத காலம் பாலியல் அடிமையாக தாம் துன்புறுத்தப்பட்டதாக கூறும் Ekhlas, தினமும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அந்த நபர் தம்மை உள்ளாக்கியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுமையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் அதில் இருந்து காப்பற்றப்பட்டதாகவும் அவர் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.

150 சிறுமிகள் உள்ளிட்ட இளம்பெண்களின் மத்தியில் இருந்து தம்மை விலைக்கு வாங்கிய அந்த நபர் நீளமான முடி வளர்த்திய கோர மிருகம் என கூறும் Ekhlas, மிகவும் மோசமானவர் எனவும் தெரிவித்துள்ளார்.

பலமுறை தப்பிக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த Ekhlas, அந்த நபர் சண்டைக்கு செல்லும் வரை காத்திருந்ததாக கூறும் அவர், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருந்து தப்பியுள்ளார்.

தற்போது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரின் உதவியால் ஜேர்மனியில் தஞ்சமடைந்துள்ள Ekhlas உளவியல் நிபுணர் ஒருவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐ.எஸ் பயங்கரவாதியுடன் கழிந்த அந்த ஆறு மாத காலமும் தமக்கு 100 மரணத்திற்கு சமம் என கூறும் Ekhlas மனதளவில் மிக ஆழமாக காயம் பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.