வவுனியா மாவட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

617

 
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவுசெய்யப்பட்ட நான்கு பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 103 இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்வர் ஊடாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைவாக பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக இளைஞர் கழகங்களுடையான கலந்துரையாடல் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகரன் கேசவன் தலைமையில் கடந்த 20.07.2017 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மட் , வன்னி மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற மாகாணப் பணிப்பாளர் முனவ்வர், அமைச்சரின் நகர இணைப்பாளர் பாரி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுகானி, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கேசவன், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.