திருமணத்திற்குச் சென்ற மூவர் கிணற்றில் வீழ்ந்து பரிதாபமாகப் பலி!!

497

அத்துருவெலை – கிரிஉல பகுதியில் மூவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு அப் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஒருவர், அங்கு பலகைகளைக் கொண்டு மூடி வைக்கப்பட்டிந்த கிணற்றில் விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இவரைக் காப்பாற்றும் முற்சியில் இருவர் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மக்கள் அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த போதும் அங்கு 38,39 மற்றும் 41 வயதான அவர்கள் மூவரும் பலியாகியுள்ளனர்.