இத்தாலியில் கடும் வறட்சி: செயற்கை நீரூற்றுக்களை மூடியது வத்திகான்!!

640

இத்தாலியின் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருவதுடன், வத்திகானில் உள்ள செயற்கை நீரூற்றுக்களுக்கான நீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மூன்றில் இரண்டு பங்கு விவசாய நிலங்களைப் பாதித்துள்ள வறட்சி, இத்தாலிய விவசாயத்தில் 2 பில்லியன் யூரோ மதிப்பிலான இழப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 100 செயற்கை நீரூற்றுக்கள் வத்திக்கானில் கட்டப்பட்டுள்ளன. அவைஅனைத்தும் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வசந்தகாலம் கடந்த 60 ஆண்டு காலப்பகுதியில் இத்தாலியில் நிலவும் 3 ஆவது மிகவும் வறட்சியான காலமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோம் நகரம் சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவையே பெற்றிருக்கிறது.

இந்த வாரத்தின் இறுதியில் கடும் நீர் கட்டுப்பாட்டு வழிமுறைகளை அறிமுகப்படுத்த நகர ஆட்சியாளர்கள் முடிவு செய்யவுள்ளனர்.

ரோமின் மிகவும் புகழ்பெற்ற செயற்கை நீரூற்றுகள் சில ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ளன.

இரண்டு வடக்கு மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இத்தாலியின் தெற்கு பகுதியில் காட்டுத் தீ பரவி, மக்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.