காலநிலை தொடர்பான விசேட அறிவித்தல்!!

277

இலங்கையில் இன்று நிலவும் காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு, ஊவா, வட மத்திய மாகாணத்திலும், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள