ஆங்கிலம் தவறாக பேசிய நபர் : ஒரே குத்தில் கொன்ற 15 வயதுச் சிறுவன்!!

620

பிரித்தானிய நாட்டில் ஆங்கில மொழியை தவறாக பேசிய நபரை 15 வயது சிறுவன் ஒரே குத்தில் கொன்றுள்ள வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Harlow நகரில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

போலந்து நாட்டை சேர்ந்த Arkadisusz Jozwik(40) என்பவர் தனது நண்பர்களுடன் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஹார்லோ நகருக்கு நண்பர்களுடன் ஷொப்பிங் சென்றுள்ளார். அப்போது, இவருடன் 15 வயது சிறுவன் ஒருவன் உரையாடியுள்ளார்.

இருவரும் நடந்து சென்றபோது சிறுவனிடன் போலந்து நாட்டு நபர் ஆங்கிலத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவர் ஆங்கில மொழியை தவறாக பேசியபோது அதை சிறுவன் கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பில் முடிந்தபோது சிறுவன் தனது கையால் பலமாக நபரின் பின் தலையில் தாக்கியுள்ளார்.

எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன நபர் சாலையில் விழுந்துள்ளார். நபரை மருத்துமனையில் அனுமதித்தபோது அவரது கபாலம் உடைந்தது மட்டுமின்றி மூளையும் பாதித்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும், சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு தினங்களுக்கு பின்னர் நபர் உயிரிழந்துள்ளார். தற்போது 16 வயதாகவும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் 10-ம் திகதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.