சட்டக் கல்லூரி சட்ட மாணவர் தமிழ் மன்றம் நடாத்திய வித்தக விழா 2017!!

732

 
இலங்கை சட்டக் கல்லூரி சட்ட தமிழ் மாணவர் மன்றம் நடாத்திய வித்தக விழா 2017 கடந்த 22.07.2017 சனிக்கிழமை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாணசபை முதலமைச்சர் நீதியரசர் C.V.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன் கெளரவ விருந்தினராக இலங்கை சட்டக்கல்லூரி அதிபர் திருமதி இந்திரா சமரசிங்க, மற்றும் சிறப்பு விருந்தினராக கல்முனை மேயர் M.நிசார் காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் தமிழ் மாணவர்களால் கண்கவர் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.