முள்ளியவளையில் மினி சூறாவளி!!

257

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில் முள்ளியவளையில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மினி சூறாவளி காரணமாக முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பன சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மரங்கள் முறிந்து வீதியில் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.