வறட்சியால் நாடுமுழுவதும் 10 இலட்சம் பேர் பாதிப்பு!!

247

நாட்டில் நிலவும் வறட்சியால் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 10இலட்சத்து 88 ஆயிரத்து 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேல், தெற்கு, மத்திய மற்றும் ஊவா முதலான ஏழு மாகாணங்களில் 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட மாகாணமே வரட்சியால் அதிக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. அங்கு ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த, 4 இலட்சத்து 62 ஆயிரத்து 815 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 34 ஆயிரத்து 49 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து206 பேரும், முல்லைத்தீவில் 35 ஆயிரத்து 730 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 308 பேரும், கிளிநொச்சி 24 ஆயிரத்து 6 குடும்பங்களைச் சேர்ந்த 83 ஆயிரத்து378 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வவுனியாவில் 24 ஆயிரத்து 507 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 771பேரும், மன்னாரில் 15 ஆயிரத்து 386 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 152 பேரும்பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது