வவுனியா கற்குழி ஞானம் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வு!!

943

 
வவுனியா கற்குழி ஞானம் முன்பள்ளியின் சிறார்களின் கண்காட்சி நிகழ்வொன்று இன்று (28.07.2017) காலை 10 மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் முன்பள்ளியின் ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்திக் குழு தலைவர் அன்ரனி ரெக்ஸன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறீரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் ப.கார்த்திக் பிரதம விருந்தினராகவும் கெளரவ விருந்தினர்களாக சிறீரெலோ இளைஞரணி செயலாளர் டினேஸ் மற்றும் வவுனியா வை.எம்.சி.ஏ தலைவர் பாரதி ஆனந்தன், கிராம அபிவிருத்தி குழு நிர்வாக உறுப்பினர் சலசுலோசன் ஆகியோர் கலந்து கொண்டு மழலைகளின் கண்காட்சி நிகழ்வை கண்டு களித்ததுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து முன்பள்ளியின் கட்டிடத்திற்கு சிறீரெலோ கட்சியின் செயளாலர் நாயகம் ப.உதயராசாவினால் வழங்கப்பட்ட கூரைத்தகட்டை கார்த்திக் மற்றும் டினேஸ் கிராம அபிவிருத்திகுழு தலைவர் ரெக்ஸனிடம் வழங்கப்பட்டது.