லொறி விபத்தில் இருவர் படுகாயம்!!

350

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் குடாஓயா பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று (28) மாலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் தொழிற்சாலை ஒன்றுக்கு விறகுகளை இறக்கிவிட்டு மீண்டும் கிதுல்கல பகுதிக்கு செல்லும் வழியில் குறித்த லொறி குடாஓயா பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் படுங்காயம்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்