ஆடம்பரக் கப்பலில் வைத்து மனைவியை கொன்ற கணவன்!!

502

அமெரிக்காவில் தொடர்ந்து தன்னை நோக்கி ஏளனமாக சிரித்த மனைவியை கணவர் ஒருவர் ஆடம்பர கப்பலில் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Utah பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த தம்பதியினர். இவர்கள் Princess எனும் ஆடம்பர கப்பலில் அலாஸ்கா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தமது மனைவி தொடர்ந்து தம்மை நோக்கி ஏளனமாக சிரித்துள்ளது Kenneth Manzanares என்பவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அவர் இருவரும் தங்கியிருந்த அறையிலேயே தமது மனைவியை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

தலையில் எதிர்பாராதவிதமாக பலமாக தாக்கப்பட்டதில் நிலைகுலைந்த அந்த பெண்மணி சம்பவயிடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய் அன்று இரவு 9 மணி அளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சொகுசு கப்பலில் பயணித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாம் பார்த்தவற்றை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கையில், Manzanares உடை மற்றும் கைகளில் ரத்தக்கறை இருந்தது எனவும், உடனடியாக அவரை கைது செய்து அடுத்துள்ள அறையில் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் முதற்கட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும், நீதிமன்றம் பிணையில் அனுப்புமா என்பது சந்தேகமே எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.