பிரித்தானியாவிற்கு பயணிப்பதில் எழுந்துள்ள நெருக்கடி!!

259

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமை, 2019 மார்ச் மாதத்துடன் முடிவடையும் என இங்கிலாந்து அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அத் திகதியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத் தொழிலாளர்கள் இங்கிலாந்திற்குள் வருவதற்கு தம்மைப் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான ப்றேக்சிட் கொள்கைகள் வகுக்கப்படும் வரை இவ்வாறு பிரித்தானியாவுக்குள் ஐரோப்பியத் தொழிலாளர்கள் வருவதற்குப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், வர்த்தகத்தை உறுதிப்படுத்தும் விதமாக பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் வெளிநாட்டு தொழிலாளர்களை நியமிப்பதன் அடிப்படையில் சிக்கல்கள் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வகுக்கப்படும் கொள்கை ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே வகுக்கப்படும் என்றும், பொருளாதாரத் தாக்கமும் கணக்கில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2019 இன் பின்னரான காலத்திலும், நிலைமாறு காலத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை அவசரமாக வணிகங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்புப் பிரச்சாரங்களில் முக்கிய தலைப்புகளில் ஒன்றாக குடிவரவு இடம்பிடித்திருந்தது. மேலும் பிரித்தானியாவின் எல்லைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சமரசப் பேச்சுக்கள் இடம்பெறும் காலப்பகுதிகளில் ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.