வவுனியாவிலிருந்து தேசியமட்ட போட்டிக்கு தெரிவான காற்பந்தாட்ட இளைஞரணிக்கு கௌரவிப்பு!!

932

 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழா 2017 ஆம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட காற்பந்தாட்ட போட்டிக்கு தெரிவான வவுனியா மாவட்ட அணியான 786 இளைஞர் கழக அணிக்கான கௌரவிப்பு நிகழ்வும், வழியனுப்பும் நிகழ்வும் நேற்று (28.07.2017) வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன் தலைமையில் இளைஞர் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வின் அதிதிகளாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவும் புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மௌலவி நஸ்லி, கிராம சேவையாளர் நஸார், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், மாவட்ட இளைஞர் சேவைகள் அதிகாரி சுகானி, உதைபந்தாட்ட சம்மேளன சுற்றுப்போட்டி செயலாளர் நிபாத், முன்னாள் இளைஞர் கழக மாவட்ட சம்மேளன தலைவர் அமுதராஜ், அல் இக்பால் விளையாட்டு கழக தலைவர் சலாவுதீன், 786 இளைஞர் கழக தலைவர் , போஷகர், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.