ஆபாச காட்சி விவகாரத்தில் இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா!!

530

nasதனுசுக்கு ஜோடியாக நய்யாண்டி படத்தில் நடித்துள்ள நஸ்ரியா நேற்று பொலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகள் எடுத்துள்ளதாக புகார் அளித்தார். இதன்மீது மத்திய குற்றப்பபிரிவு போலீசார் விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர். இன்று காலை நய்யாண்டி படத்தை பொலீசார் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் போலீசார் படத்தை பார்த்தனர். அவர்களுடன் நஸ்ரியாவின் தந்தை நசீம், மற்றும் அவரது வக்கீல்களும் படம் பார்த்தார்கள். நஸ்ரியா படப்பிடிப்புக்காக கேரளா சென்று விட்டதால் வரவில்லை.

படம் முடிந்ததும் நஸ்ரியா தந்தை நசீம் கூறும்போது நய்யாண்டி படத்தை முழுவதுமாக பார்த்தோம். நஸ்ரியாவுடன் போடப்பட்டு ஒப்பந்தத்தை மீறி காட்சிகள் உள்ளனவா என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். நஸ்ரியா தரப்பில் 3 காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாவும் அதற்கு இயக்குனரும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நஸ்ரியா இயக்குனர் சற்குணத்திடம் இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளாராம். விரைவில் இருவரும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிக்கவும் முடிவெடுத்துள்ளனராம்.