யாழில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

727

 
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதம் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த போது, புகையிரதக் கடவையை கடந்து செல்ல முற்படுகையிலேயே குடும்பஸ்தர் புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் 02.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடலியடைப்புப் பண்டைதரிப்புப் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் சிவச்செல்வன் (வயது- 59) என்ற குடும்பஸ்தரே சம்பவத்தில் பரிதாபகமாக உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.