2வது குழந்தை பற்றி யூகிக்க வேண்டாம் : ஐஸ்வர்யா ராய்!!

314

iswarya

இந்தித் திரையுலக நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஸ்டெம்செல் வங்கி ஒன்றின் வர்த்தக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகள் ஆராத்யாவின் ஸ்டெம்செல் சேமிப்பில் அவர் விருப்பம் தெரிவித்தார். நிருபர்கள் இரண்டாவது முறையாக ஐஸ்வர்யா இந்த ஸ்டெம்செல் வங்கியை உபயோகிப்பாரா என்று கேட்டார்கள்.

அவர்கள் எது குறித்து கேட்கிறார்கள் என்பது தனக்குப் புரிகிறது என்று குறிப்பிட்ட ஐஸ்வர்யா அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்படும்போது தானே அதனை தெரிவிப்பதாகவும், நிருபர்கள் இது குறித்து யூகிக்க வேண்டாம் என்றும் கூறினார். இல்லற வாழ்வில் தாயானது தான் பெற்ற ஆசி என்று கருதுவதாக ஐஸ்வர்யா சொன்னார்.

மாற்றம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் நிலையானதாக இருக்கும். ஒவ்வொரு அனுபவமும் மாற்றங்களையும், வளர்ச்சியையும் கொடுத்து நம்மை நல்ல மனிதராக மாற்றுகின்றது. தாயாக மாறுவது கடவுளின் ஆசியாகும். அதனை நான் மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளேன் என்றார்.

ஆராத்யா எங்கள் வாழ்வில் கிடைத்த அற்புதமான பரிசு. எங்களின் அன்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் கிடைத்த அவள் சிறப்பு மிக்கவள். இந்த அனுபவத்திற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாவேன் என்றும் அவர் தெரிவித்தார்.