நீரில் மூழ்கி இளைஞன் பலி!!

292

திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த நிதீஸ் முகம்மட் (24 வயது) எனும் இளைஞர், நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகியுள்ளாரென, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று, குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கிய தன் சகோதரனைக் காப்பாற்றச் சென்ற போதே, மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர், நிலாவெளி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சகோதரர்கள் இருவரும், இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞனின் சடலத்தை, நேற்றிரவு (29) 8 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.