17 வயது மாணவனுக்கு கூகுளில் வேலை!!

380

இந்தியாவில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூகுளில் கிராபிக் டிசைனிங் பிரிவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவன் ஹர்ஷித்துக்கு பத்து வயதிலிருந்தே கிராபிக் டிசைனராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி கூகுள் நிறுவனத்தில் பணியபுரிய வேண்டும் என்ற லட்சியமும் இருந்துள்ளது.

இதனால் இவர் தன்னுடைய மாமா ரோஹித் சர்மாவிடம் கிராபிக் டிசைனிங் பயிற்சியை முறையாக கற்றுள்ளார்.
அதன் பின் தன்னுடைய கடின உழைப்பினால் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவன் ஹர்ஷித் கூறுகையில், கிராபிக் டிசைனர் ஆக வேண்டும் என்பது கனவு, அதனால் நான் 11 ஆம் வகுப்பு படிக்கும் போது தொழில்நுட்ப பிரிவை தேர்ந்தேடுத்தேன். இது குறித்து என்னுடைய பெற்றோரிடம் கூறினேன்.

இதைத் தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டதால், பிரதமர் அலுவலகத்திலிருந்து 7,000 ரூபாய் பரிசுத் தொகை வந்தது, அதன்பின் பாலிவுட் திரைப்படங்களுக்கு போஸ்டர்கள் உருவாக்கினேன்.

அது போன்ற சமயத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது போஸ்டர்களை கூகுள் நிறுவனத்திற்கு ஹர்ஷித் அனுப்பியுள்ளார். இவரின் போஸ்டர்கள் கூகுள் நிறுவனத்திற்கு பிடித்துப்போகவே, கூகுள் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிமாறு கடிதம் அனுப்பியுள்ளது.

இதனால் ஹர்ஷித் வரும் ஆகஸ்ட் மாதம் கலிபோர்னியா செல்லவிருப்பதாகவும், அங்கு அவருக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அவருக்கு உதவித்தொகையாக மாதம் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும், பயிற்சிகாலம் நிறைவடைந்த பின்பு மாதம் 12 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹர்ஷித் என்னைப் போன்ற சராசரி மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் என யார் எதிர்பார்த்தது.

என்னுடைய மகிழ்ச்சி மற்றும் உணர்வை எப்படி பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை, தற்போது என்னுடைய கனவு நினைவாகியுள்ளது, இது என்னுடைய கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.