ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, பதுபொல எனும் இடத்தில் கார் ஒன்று அதிசக்தி வாய்ந்த மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்து இன்று காலை 10.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், நான்கு பேர் படுகாயமடைந்து கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த கார் கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேனை, அலகல பகுதியை நோக்கி செல்லும் வழியிலேயே இவ்வாறு வீதியை விட்டு விலகி மின் கம்பத்தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.








