யேமன் நாட்டில் 3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 41 வயதான Muhammad al-Maghrab, யேமன் தலைநகர் சானாவில் முக்கிய சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டு பொலிசாரால் ஏகே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். ஏமனில் அனைத்து சட்டங்களின் மூலதனமாக ஷரியா சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மரண தண்டனை அந்நாட்டு ஊடகங்களில் தேசிய அளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பலர் செல் போனில் பதிவு செய்துள்ளனர்.







