முல்லைத்தீவு – வற்றாப்பளை அம்மன் கோயில் வளாகத்து அரசமரத்தில் அம்மன் போன்ற வடிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த அம்மன் உருவம் நேற்றைய தினம் மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஆலய பரிபாலன சபை உருப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பெண் ஒருவர் அம்மன் வடிவில் ஒரு தோற்றத்தை முதலில் கண்டு கூறியதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தின் அறிகுறியாக அரசமரத்தில் அம்மன் போன்ற உருவம் தோன்றியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நிகழும் வைகாசி விசாகப் பொங்கள் தினத்திற்கு நாட்டில் உள்ள சகல இடங்களிலும் இருந்து இன மத வேறுபாடின்றி இலச்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








