அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட வாத்துகளை அதன் உரிமையாளர்கள் மீட்டுள்ளார்.
கடந்த யூலை மாத தொடக்கத்தில் பென்சில்வேனியா பகுதியில் சுற்றி திரிந்த நான்கு வாத்துகள், வீட்டிற்கு அருகே உள்ள எரிவாயு நிலையத்திற்குள் நுழைந்துள்ளது.
இதைக்கண்ட எரிவாயு நிலைய ஊழியர்கள் பொலிசாருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் நான்கு வாத்துகளையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனர்.
பின்னர், வாத்துகளின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாத பொலிசார், பேஸ்புக் வாத்துகளின் கைது குறித்து தகவலை பதிவிட்டுள்ளனர்.
குறித்த பதிவு இணையத்தில் வைரலாக வாத்துகள் தேசியளவில் பிரபலமடைந்தது. தகவலறிந்து குறித்த காவல் நிலையத்திற்கு விரைந்த வாத்தின் உரிமையாளர் நான்கு வாத்துகளை மீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.







