இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம்!!

500

இலங்கை பிரஜைகளுக்கு இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்படவுள்ளது.

அதனடிப்படையில் இலத்திரனியல் வெளிநாட்டு பயண கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தல் மற்றும் வெளியிடல் வேலைத்திட்டத்தினை முறையான ஆய்வின் பின்னர் அரச மற்றும் தனியார் இணைப்பின் கீழ் செயற்படுத்துவது குறித்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்புகள் அமைச்சர் ஹரின் பிரனாந்து ஆகியோர் இணைந்து குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர்.

மேலும், இந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.