ரயிலில் அனுமதியின்றி பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அனுமதியின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவின் அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்தார்.
மேலும் ரயிலில் யாசகம் கேட்போரைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






