டுபாயில் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!!

557

உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான டுபாயில் உள்ள டோர்ச் டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துபாயின் மரினா பகுதியில் சுமார் 1,105 அடி உயரம் கொண்ட, உலகில் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான Torch டவரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது உள்ளூர் நேரப்படி காலை 1 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் 9வது மாடியில் இருந்து தீப்பற்றி எரிந்து கொண்டு அப்படியே அடுத்தடுத்து பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென்று ஏற்பட்ட இந்த தீ விபத்தை அறிந்து, தீயணைப்பு படையினர் அங்கு விரைந்துள்ளதாகவும், கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து எந்த ஒரு தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்றும் முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோர்ச் டவர் உலகின் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்று எனவும், 1,105 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்றும் பிப்ரவரி 2015 ஆம் ஒரு தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் யாருக்கும் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.