துண்டு துண்டாக வெட்டி வாய்க்காலில் வீசப்பட்ட ஆண்!!

433

தமிழகத்தில் துண்டு துண்டாக ஒருவரை வெட்டி கொலை செய்து விட்டு, அந்நபரை சாக்குப் பையில் வைத்து வாய்க்காலில் வீசியது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1ம் திகதி கோவை புலியகுளம் – சவுரிப்பாளையம் சாலையில் உள்ள கல்வாயில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் சாக்குப் பையால் சுற்றப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

அதன் பின் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட நபர் ஆவராம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்தது.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, ஆவி வினோத் மற்றும் ஜோஸ்வா என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நாகராஜ், மீது பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டபோது நாகராஜ் படுகொலை செய்யப்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.