தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குதறிய கரடி!!

590

தன்னை சின­மூட்­டிய சுற்­றுலாப் பய­ணியை கர­டி­யொன்று தனது புக­லி­டத்­துக்குள் இழுத்துச் சென்று கடித்துக் குத­றிய சம்­பவம் தாய்­லாந்தில் இடம்­பெற்­றுள்­ளது. எனினும் அந்த சுற்­றுலாப் பயணி அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் தப்­பி­யுள்ளார்.

பெட்­சபன் மாகா­ணத்­தி­லுள்ள ஆல­ய­மொன்­றி­லி­ருந்த கர­டிகள் புக­லி­டத்தைப் பார்­வை­யிடச் சென்ற நயிபம் புரொம்­ரேரி (36 வயது) என்ற மேற்­படி சுற்­று­லாப்­ப­யணி கயிறு ஒன்றைப் பயன்­ப­டுத்தி சோற்றைக் கொண்ட சட்­டி­யொன்றை குறிப்­பிட்ட கர­டியின் புக­லி­ட­மான பள்­ளத்தில் இறக்­கி­யுள்ளார்.

இதன்­போது அந்தக் கரடி சோற்றை உண்ண வரவும் அவர் சோற்று சட்­டியை அங்கும் இங்கும் அசைத்து சோற்றுச் சட்­டிக்­காக அந்தக் கரடி அலைந்து திரி­வதை தனது நண்­பர்­க­ளுக்கு வேடிக்கை காட்டும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்..

இந்­நி­லையில் கடும் பசி­யுடன் இருந்த கரடி ஒரு கட்­டத்தில் சின­ம­டைந்து தனது பின்­னங்­கால்­களால் எழுந்து நின்று நயிபம் புரொம்­ரே­ரியை தாவிப் பிடித்து பள்­ளத்­திற்குள் இழுத்­துள்­ளது.

கர­டியின் திடீர் தாக்­கு­தலால் நயிபம் புரொம்­ரேரி மயக்க நிலைக்கு செல்­லவும் கரடி அவரைக் கடிக்க ஆரம்­பித்­துள்­ளது.

இதனால் அதிர்ச்­சி­ய­டைந்த அவ­ரது நண்­பர்கள் கரடி மீது தடி­களை வீசியும் குளிர் நீரை ஊற்­றியும் அதனை அங்­கி­ருந்து பின்­வாங்கச் செய்யும் முயற்­சியில் ஈடு­பட்­டனர். ஆனால் அவர்­க­ளது அந்த முயற்­சிக்கு பலன் கிடைக்­க­வில்லை.

கரடி நயிபம் புரொம்­ரே­ரியின் சதைப் பகு­தியை தனது வாயால் கௌவி அவரை அங்கும் இங்கும் இழுத்துச் செல்ல ஆரம்­பித்­தது.

இந்­நி­லையில் வேறு வழி தெரி­யாத அங்­கி­ருந்த சிலர், கர­டியின் புக­லி­ட­மான பள்­ளத்­துக்குள் இறங்கி கம்­புகள் மற்றும் தடி­களால் கர­டியை நேர­டி­யாக தாக்­கவும் அந்தக் கரடி நயிபம் புரொம்­ரே­ரிiயை விட்டு பின்­வாங்க ஆரம்­பித்­தது.

இத­னை­ய­டுத்து துரி­த­மாக செயற்­பட்ட நயிபம் புரொம்­ரே­ரியின் நண்­பர்கள் மயங்கிக் கிடந்த அவரை அவ­சர அவ­ச­ர­மாக அங்­கி­ருந்து மீட்­டனர்.

தொடர்ந்து சம்­பவ இடத்­துக்கு வந்த அவ­சர சேவைப் பிரி­வி­னரால் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்ட நயிபம் புரொம்­ரே­ரியின் உடல் நலம் தற்­போது தேறி வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. மேற்­படி சம்பவத்தில் அவர் உயிர் தப்பியமை அதிசய சம்பவம் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட ஆலயத்தின் மதகுருமார் மேற்படி கரடியையும் ஏனைய விலங்குகளையும் வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.