வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம் : கிளிநொச்சியில் நடந்த சோகம்!!

695

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்.

ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி இன்று நண்பகல் 1 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன் இரத்தம் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சிறுமி கடந்த ஐந்து நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய தினமே குறித்த சிறுமி கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி இன்று இரவு 8 மணியளவில் இறந்துள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இச்சிறுமிக்கு பாரதூரமான நோய் எதுவும் இருப்பதாகத் தெரியவரவில்லை என வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கின்றன.

எனினும் இவரது இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காய்ச்சல் முதலான அறிகுறி தென்படும் எவரும் அருகில் உள்ள அரச மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் வேண்டிக் கொள்கின்றனர்.