தந்தங்களுடன் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட யானை!!

530

 
மரக்கிளை ஒன்றில் தந்தங்கள் மற்றும் தும்பிக்கையுடன் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய யானை ஒன்று பல மணித்தியாலங்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.

உடவளவ தேசிய வன பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த யானையை காப்பாற்றும் நடவடிக்கையில் 30க்கும் மேற்பட்ட வன உயிரின இலாகா அதிகாரிகளும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் ஈடுபட்டிருந்தனர்.

பூங்காவில் உள்ள மரமொன்றில் சிக்குண்ட யானைக்கு மயக்க மருந்து ஊசி ஏற்றப்பட்டு பின்னர், மரக் கிளைகளை அகற்றி யானையை காப்பாற்றியுள்ளதாக வன உயிரின இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

45 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த யானை அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து பயிர்களுக்கு சேதம் விளைவித்து வந்த ஒன்று என கூறப்படுகின்றது.