வவுனியாவிற்கு 2200 பொருத்து வீடுகளை வழங்க நடவடிக்கை!!

1042

வவுனியா மாவட்டத்திற்கு பொருத்து வீடுகள் வழங்குமாறு கோரி 12 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2200 வீடுகளைப் பெற்றுக்கொடுக்க இந்து கலாச்சார அமைச்சு மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வன்னி மாவட்ட ஜக்கிய தேசியக்கட்சியின் இணைப்பாளரும் சிறைச்சாலை கண்காணிப்பாருமான எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவரிடம் வவுனியா மாவட்டத்தில் பொருத்து வீடுகளைப் பெற்றுக்கொள்ள வண்ணப்பித்தவர்களின் நிலைமைகள் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துளள்ளார்.

வவுனியா மாவட்டத்திலிருந்து பொருத்து வீடுகளைப் பெற்றுக்கொள்ள நான்கு பிரதேச செயலகங்கள், கிராம அபிவிருத்திச்சங்கம் மாவட்டச் செயலகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி பொதுமக்களின் விருப்பத்திற்கு அமைய அவர்களுக்கு பொருத்து வீடு பெற்றுக்கொடுக்க இந்து கலாச்சார அமைச்சு மற்றும் புனர்வாழ்வு சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

பொருத்து வீடுகளில் வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு 500 வீடுகளை வழங்குவதற்கும் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திலுள்ளவர்களுக்கு 119 பொருத்து வீடுகளும் வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 07 வீடுகளும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 1074 வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் மிகுதியாகவுள்ள 500 வீடுகளை மேலதிகமாக விண்ணப்பித்துள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபரின் அனுமதியுடன் பூர்வீகக் கிராமத்திலுள்ளவர்களுக்கு 20 வீடுகளும் மீள் குடியேற்றக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு 60 வீடுகளையும் வழங்க சிபாரிசு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.