வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் சிரம சக்தி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு!!

706

 
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடான இளைஞர் கழகங்களின் சமூக அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழாக வழங்கப்பட்ட வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் குழாய் கிணறு மற்றும் மலசல கூட தொகுதிக்கான ஆரம்ப நிகழ்வு இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் நிதர்ஷன் தலைமையில் கடந்த 04.08.2017 அன்று நடைபெற்றது.

இன் நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஆர்.சசிகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் ரவி, தீடீர் மரண விசாரணை அதிகாரி லாசர் சுரேந்திரசேகரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவர் தே.அமுதராஜ், மாவட்ட சம்மேளன உறுப்பினர் நிபாத் ஆகியோருடன் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.