வவுனியாவில் புளொட் இளைஞரணியினால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு!!

359

 
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் ஒழுங்கமைப்பில் நெளுக்குளம் காத்தான் கோட்ட அமனா கழகத்தின் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (05.08.2017) கழக மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

புளொட் அமைப்பின் உப தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கத்தால் புளொட் அமைப்பின் இளைஞரணியின் வவுனியா மாவட்ட செயலாளர் ஸ்ரீகரன் கேசவனின் (இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்) பிறந்த தினத்தினை முன்னிட்டு இக் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புளொட் அமைப்பின் இளைஞரணி செயலாளர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அமனா கழகத்தின் இயக்குனர் இராஜசிங்கம், உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் எ.ஜோன்சன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தி.அமுதராஜ், ஆசிரியர் ரவி, புளொட் இளைஞரணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வ.பிரதீபன், உப தலைவர் பி.கெர்சோன், நிர்வாக உறுப்பினர் ஜெ.கஜுரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.