வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 10 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று (06.08) காலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தானினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இஸ்லாமிக் நிவாரண அமைப்பின் நிதி உதவியுடன் Wafa Charity நடைமுறைபடுத்தப்பட்ட உதவியிலிருந்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியில் 5 பேருக்கு மாடுகள், 5பேருக்கு ஆடுகள் என வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
யுத்தத்தினால் கணவனை இழந்த குடும்பங்கள் சுகயீனமுற்ற குடும்பங்களான பெரியதம்பனை, பாலமோட்டை, பாவற்குளம், ஆண்டியபுளியங்குளம், காக்கையன்குளம் ஆகிய பகுதிகளிலுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தானின் வேண்டுகோளிற்கு அமைய இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இஸ்லாமிக் நிவாரண அமைப்பின் திட்ட முகாமையாளர் எம்.எம்.பஷால், Wafa Charity நடைமுறைப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரி து.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்தனர்.











