வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி கடினப்பந்து துடுப்பாட்ட அணிகளினை பலப்படுத்தும் முகமாக இந்துவின் 15 வயதின் கீழான அணிக்கும் 19 வயதின் கீழான அணிக்கும் இடையிலான கடினப்பந்து சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி நேற்று (06.08.2017) வவுனியா கோவில்குளம் ஐக்கிய நட்ச்சத்திர விளையாட்டு மைதானத்தில் ஆசிரியர் சிவதர்சனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இத் துடுப்பாட்ட போட்டியினை புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சு.காண்டீபன், புளொட் இளைஞரணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வ.பிரதீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்கள்.



















