வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று (07.08.2017) மதியம் 2.50 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கந்தசுவாமி ஆலய வீதியூடாக வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது மணிக்கூட்டு சந்தியடியில் கண்டி வீதியுடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 52, 55 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.