வறட்சியினால் 19 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்பு!!

827

19 மாவட்டங்களில் கடும் வறட்சியினால் 341, 411 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 139,000 இற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 39,183 குடும்பங்களைச் சேர்ந்த 1,39,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் முந்தல், வண்ணாத்திவில்லு, ஆனமடு, கருவலகஸ்வெவ, நவகத்தேகம, மகாகும்புகடவல,சிலாபம், மஹவ,தங்கொட்டுவ ,பள்ளம, ஆராச்சிக்கட்டு மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடி நீரின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள பல குளங்கள் மற்றும் குட்டைகளில் நீர்வற்றிக் காணப்படுகிறது.

குறிப்பாக நவ்டான்குளம் பெரிய கடவல குளம் கடும் வறட்சினால் நீர் இன்றி காணப்படுவதினால் அதனை நம்பி நன்னீர் பீடியில் ஈடுபட்டு வந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வறட்சியினால் குடி நீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன் பணம் கொடுத்தே குடி நீரை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை வறட்சியினால் கிளிநொச்சி மாவட்ட மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அரத்திநகர் பகுதியில் தொடர்ந்தும் நிலவிவரும் வறட்சி காரணமாக 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் கிணறுகளில் நீர் வற்றிக் காணப்படுகிறது