வவுனியா கண்டிவீதி மதவுவைத்த குளம் பிரதேசத்தில் சற்றுமுன் கோரவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த ஹயெஸ்வான் பாரவூர்தி ஒன்றுடன் மோதியதனால் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்து வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 1.45 மணியாவில் வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக விமானநிலையத்திலிருந்து வவனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயெஸ் வான் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வாகன சாரதியாக சுவிஸ்நாட்டைந் சேர்ந்த காந்தன் வயது (56) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில்படுகாயமடைந்த தர்சன் (26), அப்றஜிதன் (23) கிரிதரன் (25) ஆகியோர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.