பேரூந்தின் சில்லுக்குள் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த கிளிநொச்சி இளைஞன்!!

747

 
கதிர்காமத்தில் பேரூந்தின் சக்கரத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கதிர்காமத்தில் உள்ள மைதானம் ஒன்றில் பெரஹேராவை பார்க்க வந்த சிலர் வீதி அருகில் உறங்கியுள்ளனர். இதனைக் கவனிக்காத பேரூந்தின் சாரதி பேரூந்தை பின்னோக்கி செலுத்தியபோது அங்கு உறங்கி கொண்டிருந்த மூவர் பேரூந்தின் சில்லுகளில் சிக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் கதிர்காம ம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 41 வயதான இருவராவார்.

இவர்களில் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நா.நிதர்சன் என்ற 18 வயது இளைஞனின் மரணச் சடங்கு இன்று இடம்பெற்றுள்ளதுடன் அவரின் உயிரிழப்பு அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.