வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தில் நேற்று மதியம் இலங்கை பிரதமரின் அரசியல் பிரவேசத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிவன் ஆலயத்தின் செயலாளர் ஆறுமுகம் நவரட்ணராஜா, கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் சிவலிங்கம், கருணதாச எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.


















