தமிழ் இளைஞனுக்கு பிராந்திய பொலிஸ்மா அதிபரால் கிடைத்த அதிஷ்டம்!!

787

கிளிநொச்சி – பளையைச் சேர்ந்த 23 வயதான தமிழ் வேகப்பந்து மற்றும் கடினப்பந்து வீச்சாளரை வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற குறித்த இளைஞனின் பயற்சிகளுக்குத் தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்வதற்கு வசதிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞர் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் விஜயராஜிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மேலும் அவரது திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.