மன்னார் – மடுமாதா திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு சென்றிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், தொடுவாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மடுமாதா திருத்தல வளாகத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் இரும்புக்கம்பியைப் பிடித்திருந்த சந்தர்ப்பத்தில், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது