வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (10.08.2017) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குருமன்காட்டுச் சந்தியிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டியின் மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியில் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியினை செலுத்திச் சென்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.















